வலியை எதிர்த்துப் போராடுவேன்… அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் பிருத்விராஜ் உருக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,June 28 2023]

மலையாளம், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவரும் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு இதனால் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களிடையே கடும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்ததும் நடிகர் பிருத்விராஜ் உருக்கமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் பிருத்விராஜ் தமிழிலும் ‘மொழி’, ‘காவியத்தலைவன்’ என்று பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் இவர் ‘லூசிஃபர்’, ‘ப்ரோ டாடி’ எனும் இரண்டு திரைப்படங்களை இயக்கி முக்கிய இயக்குநர் பட்டியலிலும் இணைந்துள்ளார். இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் ‘விளையத் புத்தர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயன் நம்பியார் இயக்கும் இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கொச்சி மாவட்டத்திலுள்ள மறையூர் பகுதியில் நடைபெற்றபோது முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாகவும் அதில் நடிகர் பிருத்விராஜ்க்கு விபத்து ஏற்பட்டதாகவும் முதலில் தகவல் வெளியாகியது. இதையடுத்து கடந்த திங்கள் கிழமை அவருடைய வலது காலில் ஹீகோல் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகத் தகவல் கூறப்பட்டது

தற்போது அதுகுறித்து நடிகர் பிருத்விராஜ் சமூகவலைத் தளத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஆமாம்… விளையத் புத்தர் படத்தின் ஆக்ஷன் காட்சியை படமாக்கும்போது எனக்கு விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக நான் திறமையான மருத்துவ நிபுணர்களின் கைகளில் இருக்கிறேன். இப்போது நான் அதிலிருந்து மீண்டுள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஓய்வு மற்றும் பிசியோதெரபி செய்ய வேண்டும்.

அந்த நேரத்தை ஆக்கப்பூர்மாகப் பயன்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். மேலும் முழுமையாக குணமடையவும் விரைவில் செயலில் இறங்கவும் வலியை எதிர்த்துப் போராடுவேன் என்று உறுதியளிக்கிறேன். அன்பு மற்றும் அக்கறை தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் அறுவை சிகிச்சை முடிந்து இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஒய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கும் தகவலை டிவிட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து ‘விளையத் புத்தர்‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத்தவிர ‘ஆடுஜீவிதம்’ திரைப்படத்திலும் அதேபோல இந்தியில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் நடிக்கும் ‘படே மியான் சோட் மியான்‘ திரைப்படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த வார ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து.. 4 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தது மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகிறது

'பிச்சைக்காரன் 2' படத்தை அடுத்து விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவின் குரலுக்கு இவ்வளவு பவரா? லைக்ஸ்களை குவிக்கும் ஜிம் வீடியோ..!

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்த பல திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் தீபா வெங்கட் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இந்த நடிகைக்கு மனநோயா? லேட்டஸ்ட் வீடியோவுக்கு குவியும் கண்டனங்கள்..!

பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் படு கிளாமரான வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் லேட்டஸ்ட் வீடியோவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. கு

வேற லெவலில் அஜித்.. ஷாலினி அஜித் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய நிலையில் அவ்வப்போது அவர் தனது குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன் அவர்